சென்னை: பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.ஜாண்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தலில், பத்மாநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஜாண்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.